Wednesday, 18 December 2019

இதர நிறுவனங்களுக்கான செல்போன் அழைப்பு கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர்வரை நீட்டிப்பு

புதுடெல்லி,

செல்போன்களில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவன இணைப்பில் இருந்து வேறு நிறுவன இணைப்புக்கு பேச ஒரு நிமிடத்துக்கு 6 பைசா, கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை அழைப்பு மேற்கொண்ட நிறுவனம், அழைப்பை பெற்ற நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. இந்த கட்டணம், வருகிற ஜனவரி 1-ந்தேதியுடன் ரத்துசெய்யப்படுவதாக இருந்தது.

ஆனால், இது அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிவரை நீடிக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நேற்று அறிவித்தது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இக்கட்டணம் ரத்தாகும் என்று தெரிவித்தது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...