Thursday, 19 December 2019

நித்யானந்தாவை கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்... கர்நாடக சிஐடி போலீஸ் முறையீடு

நித்யானந்தா எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச காவல் துறையான இன்டர்போலிடம் கர்நாடக சிஐடி போலீஸ் முறையிட்டுள்ளது.

ஒரு நாட்டில் தேடப்படும் குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றால் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்.

நித்யானந்தாவுக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இன்டர்போலின் அதிகாரத்திற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்படும்.

தங்களது நாட்டில் நித்யானந்தா உள்ளாரா இல்லையா என்ற விவரத்தை அந்த நாடுகள் இன்டர்போலுக்கு தெரிவிக்கும். கர்நாடகாவில் சிஷ்யை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நித்யானந்தாவை காவல்துறை தேடி வருகிறது.

இது தொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்போது வரை நித்யானந்தா எங்கே இருக்கிறார் என தெரியாத நிலையில், அவரை கண்டுபிடிக்க ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கர்நாடக சிஐடி முறையிட்டுள்ளது

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...