Thursday, 19 December 2019

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் பொது மக்களிடத்தில் மனுக்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் பெற்றுக்கொண்டார்


விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ்மாண்புமிகு  தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்  மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்டோர் இடம் முதியோர் உதவித் தொகைக்கான மனுக்கள் வீட்டுமனை பட்டா மாற்றம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்ட ஏழைகளுக்கான மனுக்களை பெற்றுக்கொண்டார் இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை வழங்கினார் மரக்கன்றுகளை நட்டார் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் அனு மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி முத்தமிழ்செல்வன் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் TD சேகர் மற்றும் அதிமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முன்பதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்   அவர்களுக்குசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

ச. சரண்ராஜ்
திண்டிவனம்

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...