ஆம்பூர்:குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் 59 ஜமாஅத்கள் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளன.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களில் 14 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் 59 ஜமாஅத்கள் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த போர்ராட்டத்தில் ஆம்பூர் அனைத்து ஜமாஅத் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment