Sunday, 15 December 2019

இருக்கு... இன்னும் மழை இருக்கு.. அடி வெளுக்க போகுது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!


சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக மற்றும் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று அவர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியான மழை அளவு 44 சென்டிமீட்டர் என்றும் அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம், நந்தியார் தலைப்பு பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், ஈரோடு, தூத்துக்குடி, திருச்செந்தூரில் தல 6 மீட்டர் மழையும் பதிவாகி இருக்கின்றது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...