நெல்லை: உறவுக்கு தடையாக இருந்த மனைவியை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசினார் கணவர்.. இதையடுத்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கேரள போலீசார் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.
கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தன்னுடன் படித்த பள்ளி தோழி சுனிதாவை சந்தித்தார்.. இருவரும் நெருங்கி பழகினர்.. சுனிதா கணவனை விட்டு பிரிந்தவர்.. பிரேம்குமாருக்கும் வித்யாவை பிடிக்காது.
இதனால் சுனிதாவும் - பிரேம்குமாரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ நினைத்தனர். இதற்கு வித்யா தடையாக இருக்கவும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். சிகிச்சை அளிப்பதாக அழைத்து சென்று திருவனந்தபுரம் அருகே ஒரு பங்களாவில் தங்க வைத்து, நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்.. மயங்கி விழுந்ததும் இருவரும் வித்யாவின் கழுத்தை நெரித்துள்ளனர்..
சுனிதா நர்ஸ்-ஆக வேலை பார்ப்பதால், ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் பிளேடால் உடலை துண்டாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வி அடைந்ததால் உடலை காரில் கொண்டு வந்து வள்ளியூரில் வீசி சென்றதாக 2 பேருமே போலீசில் வாக்குமூலம் தந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில்தான் வித்யாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவரது சடலத்திற்கு யாருமே உரிமைக்கோரி வராததால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இந்நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் சேர்ந்து வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

No comments:
Post a Comment